ஆசிர்வாதங்களை பெற்றுக்கொள்வது எப்படி? - 1


                                                                                             
கேளுங்கள் ! அப்பொழுது கொடுக்கப்படும் !!

அனைவரையும் ஆசிர்வதிக்கும் ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இயேசு உங்களை எப்பொழுதும் ஆசிர்வதிக்க விரும்புகிறார். அவர் உங்கள் தேவைகளை எல்லாம் சந்திப்பார். உங்கள் குறைவுகளை எல்லாம் நிறைவாக்குவார். உங்கள் வாழ்வை செழிக்கசெய்வார்.  
      ஆசீர்வதிப்பது தான் ஆண்டவருடைய குணம். ஆண்டவர் மனிதனை உருவாக்கி, அவனை  ஆசீர்வதித்தார். அப்படி ஆண்டவர் ஆசீர்வதிக்கிறவர் என்றால் ஏன் என் வாழ்வில் ஆசீர்வதமே இல்லை? ஏன் என் வாழ்வில் வியாதிகள் நீங்கவில்லை? ஏன் என் தேவைகள் சந்திக்கப்படவில்லை? ஏன் எனக்கு  அற்புதம் செய்யவில்லை என்று கலங்கி, கவலைப்பட்டு கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிரீர்களா? கவலைப் படாதீர்கள்.
      ஆண்டவர் இயேசு உங்களை ஆசிர்வதிக்கவேண்டும் என்று ஆர்வமாய் இருக்கிறார். ஆனால் அந்த ஆசிர்வதைத்தை,  அற்புதத்தை  எப்படி பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அநேகர் அறியாத காரண்த்தினால் தான் பெற்றுக்கொள்ளாதிருக்கிறார்கள். நீங்கள் அறிந்து கொண்டால் இன்றைக்கே, இப்பொழுதே  ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வீர்கள்.   
ஆண்டவர் இயேசு உங்கள் வாழ்வில் அற்புதம் செய்ய, அதிசயம் செய்ய  நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
தேவனுடைய வார்த்தையாகிய வேதாகமம் சொல்கிறது கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்கு திறக்கப்படும்;
ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்கிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்கு திறக்கப்படும். (மத்தேயு 7:7,8)
      ஆண்டவர் சொல்கிறார் நீ என்னிடம் கேள்; உனக்கு கொடுக்கப்படும். ஏனென்றால், கேட்கிற எவனும் பெற்றுக்கொள்கிறான். நாம் கேட்டால் ஆசிர்வாதத்தை, அற்புதத்தை பெற்றுக்கொள்ள முடியும். நாம் கேட்க வேண்டும் என்று ஆண்டவர் எதிர்பார்க்கிறார். நம் ஆண்டவரிடத்தில் ஜபத்திலே எதைக் கேட்டலும் அதை நாம் பெற்றுக்கொள்ள முடியும். நாம் கேட்க்கவேண்டும்!
ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்கிறான். (மத்தேயு 7:8) ஆண்டவரிடத்தில் நாம் கேட்க்கும் பொழுது இது நடக்குமா? எப்படி நடக்கும்? என்று நீங்கள் நினைத்துக்கொண்டு இருக்கிற காரியங்களைக் கூட ஆண்டவர் அற்புதமாய் முடித்துத் தருவார்.
ஆனால் நம்மில் அநேகர் எனக்கு என்ன தேவை என்று ஆண்டவருக்குத் தான் தெரியுமே? பின்பு  நான் ஏன் கேட்க்க வேண்டும்? என்று கேட்ப்பதில்லை. உண்மைதான். உங்களுக்கு இன்ன தேவை அன்பதை தேவன அறிந்திருக்கிறார். ஆனால் நீங்கள் கேட்க்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்.
பர்திமேயு என்ற ஒரு குருடன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான்.        இயேசுவை நோக்கி இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று குப்பிட்டான். இயேசு அவனை அழைத்து நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். அதற்கு அவன் ஆண்டவரே நான் பார்வையடைய வேண்டும் என்றான். இயேசு அவனை நோக்கி நீ போகலாம். உன் விசுவாசம் உன்னை ரட்சித்தது. உடனே அவன் பார்வை அடைந்தான். (Mark 10 : 46-52)
அவனுக்கு என்ன தேவை என்று ஆண்டவர் அறிந்திருந்தும் அவன் தன் வாயினால் தன்னிடம் கேட்க்க வேண்டும் என்று இயேசு விரும்பினார். பர்திமேயு குருடன் கேட்டான், பெற்றுக்கொண்டான். நீங்களும் இயேசுவிடம் கேளுங்கள்.
 “…நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்ப்பிர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார். (மத்தேயு 21: 22)  நீங்களும் இயேசுவை விசுவாசித்தால் உங்களுக்கும் அற்புதம் நடக்கும்.  உங்களில் அநேகர் ஆண்டவரை நோக்கி விண்ணப்பம் பண்ணாததினாலே பெற்றுக்கொள்கிறதில்லை. நீங்கள் விண்ணப்பம் பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்கு சித்திக்கிறதில்லை. (யாக் 4:2)  நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் விண்ணப்பம் பண்ண வேண்டும் என்று வேத வசனம் சொல்கிறது.  நீங்கள் ஜெபம் பண்ணும்போது எவைகளைக் கேட்டுக் கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும். (மாற்கு 11:24) 
நீங்கள் ஆண்டவரிடத்தில் விசுவாசத்தோடு கேட்க்கும்போது அவர் உங்களை ஆசீர்வதிப்பார். உங்களுக்கு அற்புதம் செய்வார். உங்கள் குறைவுகள் எல்லாம் நிறைவாகும். உங்கள் வாழ்வு செழிக்கும்.  உங்கள் துக்கம் சந்தோசமாய் மாறும்.
ஆண்டவர் இயேசு உங்களை ஆசீர்வதிப்பராக.   
- - - - - - -